காலையிலேயே
சுறுசுறுப்பாகிவிடும்அந்த இடம்
ஒரு அடி உயரத்திற்கு
மண்குவித்து
கோணி பரப்பி
மூட்டைகளை
ஆ வெனத் திறந்துவைத்துக்
காத்திருப்பார்கள்
சனிமூலையோரம் ஆடுமாடுவாங்குபவர்கள்
துணிபோர்த்திவிரல்களில் விலைபேசுவார்கள்
சந்தைமேடு செல்லும்பாதையோரம்
கிளி ஜோசியக்காரன்
நான்கு சதுர அடியில் ஆணி அடித்துத்
துணிச்சுவர் எழுப்பி
கூரையில்லா வீட்டில்
கிளி தரும் சீட்டில் வெள்ளாமைக்கான
எதிர்காலம் சொல்லிகாசுசேர்ப்பான்
வீட்டு முருங்கைக்காயைத் திருடி
ரூபாய்க்கு இரண்டாய்விற்று
ரெண்டாவது ஆட்டம் பார்ப்போம்
மீனாட்சி கொட்டாயில்
அடுத்து
ஆடுமாடு வாங்க வருவோருக்காக
துண்டில் விலைபேசிய
தரகு ராமசாமி
சுhராயம் குடித்துசாய்ந்திருப்பான்
ஆலமரத்தடிபஸ்ஸேன்டில்
அன்றைக்கு மட்டும்
கூச்சல் கூடாக மூச்சிறைக்க
ஏரிக்கரை ஏறி இறங்கும்
எங்கள் ஊர் பஸ்
அடிக்கடி குறுக்கும்நெடுக்குமாய்
ஓடும் பஸ்சாலையை கடக்க
விளக்கை எதிர்பார்த்துக் கிடக்கும்
பலருடன் சேர்ந்து கடக்க வுண்டியுள்ளது
அடையாளம் வைத்துசென்ற
வீடுகள்ஓராண்டுக்குள்
அடுக்குமாடி குடியிருப்பாகின்றன
ஆரசமரம் ஆலமரம் புளியமரம் இல்லாமல்
வேகமாய் வளரும்
தூங்குமூஞ்சி மரங்களுக்கிடையில்
வாழும்போதும் நினைவில் வந்து போகிறது
கருவாடு வாசனைமாறாத
அந்த்ச் சந்தைமேடு
முனைவர் ம.இளங்கோவன்
----------------------------------------------------------------------------------------------------------------------------------
இருண்மை
இயல்பாய் இருப்பவனுக்குப்
பைத்தியம் என்றுபெயர்
ஓர் இசை மெடடில்
இயைந்து கிடப்பவனுக்குஇசைப் பைத்தியம்
ஆடையேஒருஅவமானச் சின்னம்
இங்குயாருக்கோ பொருந்தும்
ஆடையை
யார் யாரோஅணிந்து கொண்டு அலைகிறார்கள்
உள்ளம்எப்போதும்
வெளிச்சம் விரும்புவதில்லை
அதனால் தான்
வார்ததைகள் நாகரிகப் போர்வைக்குள்
ஒளிந்து கொள்கின்றன
இயல்பாய்
இருப்பதற்கு இருண்மையே
முனைவர் .இளங்கோவன்

No comments:
Post a Comment